கொழும்புமுக்கிய செய்திகள்

சினிமா பாணியில் பெண் செய்த செயல் – இலங்கை முழுவதும் நடந்த மோசடி!!

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தில் புதிய மோதிரம் வாங்குவதாக கூறி வந்து ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க முலாம் பூசப்பட்ட இரும்பு மோதிரத்திற்கு இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான மோதிரத்தை மாற்றிய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் ஏழு தங்க நகை விற்பனை நிலையங்களில் ஏழு தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு தொடர்பில் இந்த பெண் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 21ஆம் திகதி ஹோமாகம நகருக்கு அருகில் உள்ள தங்க நகை விற்பனை நிலையத்திற்கு வந்த குறித்த பெண், இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மோதிரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

மீதிப் பணத்திற்கு அவர் அணிந்திருக்கும் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மோதிரத்தையும் தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த பெண் பல்வேறு வகையான மோதிரங்களை சோதனை செய்துள்ளார். மேலும் சில மோதிரங்களை சோதனை செய்தபோது, ​​​​திடீரென அவர் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி தனது விரலில் புதிய மோதிரத்தை அணிந்துள்ளார்.

பின்னர் புதிய மோதிரத்தில் அச்சிடப்பட்டிருந்த லேபிளை பழைய மோதிரத்தில் ஒட்டியுள்ளார். பழைய மோதிரத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க 500 ரூபாய் முன்பணமாக கொடுத்துவிட்டு வங்கியில் இருந்து பணத்தை பெற்று வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் முற்பணமபக வழங்கப்பட்ட 500 ரூபாய்க்கு ரசீது இல்லாமல் சென்றுவிட்டதால் சந்தேகமடைந்த நிறுவனத்தின் உரிமையாளர், அந்த பெண் சோதனை செய்த மோதிரங்களை மீண்டும் சரிபார்த்தபோது, ​​இரும்பினால் செய்யப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட மோதிரம் இருப்பது தெரியவந்தது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: