இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

தம்பலகாமத்தில் அரச அதிகாரிகளுக்கான மந்த போசணை தொடர்பான விழிப்புணர்வு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகளுக்கான மந்த போசணை தொடர்பான விழிப்புணர்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று(26) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது ஸ்கலிங் அப் நியுஸ்ரிசன் பீபிள்ஸ் போரமின் நிதிப் பங்களிப்பிலும் சக்தி மகளிர் அமைப்பின் மூலமாகவும் இடம்பெற்றது.

மந்தபோசணை, உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியமான நிலை ஆகிய பல விடயங்கள் இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு வளவாளராக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தாய் சேய் நல மருத்துவ அதிகாரி வைத்தியர் ஏ. எச். சமீம் கலந்து கொண்டார்.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மலர்விழி, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: