இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்

முல்லைத்தீவு முறிகண்டி ஏ 9 வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு  பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஏ 09 வீதில் யாழ்ப்பாணம் நோக்கிப்  பயணித்த பாரஊர்தி ஒன்றும் திருமுருகண்டி பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குத் திரும்ப முற்பட்ட கப்ரக  வாகனமும்  இன்று(26) காலை மோதி  இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ்விரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானதில் கப்ரக வாகனத்தில் பயணித்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர் 

இவ்வாறு உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் கிளிச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: