கொழும்புமுக்கிய செய்திகள்
இரத்தினபுரி கோரவிபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!!
இரத்தினபுரி – கொழும்பு வீதி திருவனகெட்டிய பகுதியில் வாகன விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (13.05.2023) பதிவாகியுள்ளது.
பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.