இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்!!

திருகோணமலையில் 17 வயதுடைய சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் குறித்த சிறுவனின் சடலம் இன்றைய தினம் (08.05.2023) மீட்கப்பட்டுள்ளது.

வசந்தராஜா நிலுஜன் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனை
அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: