இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு உறவினர்களால் அஞ்சலி

அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது சமாதியில் அன்னையின் மகள், உறவினர்கள் மற்றும் அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அன்னையர் ஆகியோர் இன்று(19) சமய கிரிகைகளுடன்  சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1988 ம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் மார்ச் 19 ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு ஏப்ரல் 19 ம் திகதி உயிர்நீத்தார்.

இந் நிலையில் அவரது 36 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு அவரது சமாதியில் இன்று காலை 10 மணியளவில் அவரது மகள், அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அன்னையர், மட்டு அம்பாறை தலைவி கலைவாணன் பவளராணி மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சமயக் கிரியைகளுடன் அன்னையின் சமாதிக்கு மலர் தூவி மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: