இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்
கிரானில் அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தினம்
தியாகதீபம் அன்னை பூபதியின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தினம் அவர் பிறந்த மண்ணான கிரானில் இன்று(19) உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு சிவில் செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது அவரது உருவப்படத்திற்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச் சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவரது தியாகம் தொடர்பான நினைவுரையும் நிகழ்த்தப்பட்டது.
அன்னை பூபதி இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அவர் உயிர் நீத்து இன்று 36 ஆவது ஆண்டு நினைவு தினமாகும்.
இதனை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு நாவலடியில் அவரது உருவச் சிலை அமைந்துள்ள இடத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.