இலங்கைகிழக்கு மாகாணம்
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ரி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக கிரிக்கட் வீரர்களை ஏலம்மூலம் பெற்று ரி20 கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றை மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபை நாளை(20) பிரமாண்டமான முறையில் நடாத்தவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரரும் தனது திறமையினை வெளிப்படுத்துவதற்கான களத்தினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இச் சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(180கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.