இலங்கைகிழக்கு மாகாணம்கொழும்புபிரபலமானவைமுக்கிய செய்திகள்வட மாகாணம்

பொலிஸாரின் வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம்: மூவர் கைது!!!

மருதானை – பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி பொலிஸாரின் வாகனத்தை தாக்கி உதிரிபாகங்களை அகற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையில் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு-12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18, 31 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது நடவடிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: