இலங்கைகிழக்கு மாகாணம்கொழும்புபிரபலமானவைமுக்கிய செய்திகள்வட மாகாணம்
பொலிஸாரின் வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம்: மூவர் கைது!!!
மருதானை – பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி பொலிஸாரின் வாகனத்தை தாக்கி உதிரிபாகங்களை அகற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையில் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு-12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18, 31 மற்றும் 46 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது நடவடிக்கை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.