இலங்கைமலையகம்

நுவரெலியாவில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது

நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த பிரித்தானியப் பெண் ஒருவரையும் உள்ளூர் வாசி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நுவரெலியாப் பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் பயணித்த வேனை சோதனையிட்ட போது சுமார் 19 கிராம் குஸ் கஞ்சா மற்றும் 03 கிராம் ஹஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் 35 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரும் நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: