இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு செயலமர்வு!!

ஊடகவியலாளருக்கும்  சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும்   இடையிலான பிணக்குகள் ஏற்படுத்துவது   தொடர்பான செயலமர்வு  திருகோணமலை எழுத்தாணி கலைப் பேரவையின் ஏற்பாட்டில்    இரண்டு நாள் பயிற்சி திருகோணமலை மல்லிகா விடுதியில்,

நடைபெற்றது.  ஊடகவியலாளர்கள் சமூகத்தின் பிரச்சனைகளை எவ்வாறு வெளியில் கொண்டு வருதல் அதற்கான வழிமுறைகள் மற்றும் தொடர்பாடலை அதிகரித்து அதன் மூலமாக பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்தல்   தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவூட்டும் செயலமர்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது 

இச்செமலமர்வில் வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பீ.எம்.பைரூஸ் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.

எழுத்தாணி அமைப்பின் தலைவர் வடமலை ராஜ்குமார் மற்றும் பொருளாளர்  அச்சுதன்  ஆகியோருடன் அமைப்பின் திட்ட ஆலோசகர் சுபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம்  ஊடகவியலாளர்கள் மற்றும் பெண் ஊடகவியலாளர் என 20 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: