இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

கிளிநொச்சியில் பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திரப் பயணம்

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு இன்று(28) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து மகளிர் தின நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றது. 

உழவு இயந்திர சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ள 8 பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி நிகழ்வில் பெறுமதி சேர்த்தனர்.

குறித்த பெண்களிற்கு ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட விருந்தினர்கள் உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து குறித்த பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி விழா மண்டபம் வரை சென்றதை தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமானது.

நிகழ்வில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: