இலங்கைகிழக்கு மாகாணம்
ஏறாவூர் கிழக்கு சமுர்த்தி வங்கியின் பாரம்பரிய விளையாட்டு விழா
பிரதேச செயலகம் ஏறாவூர் நகரம் நடாத்திய விளையாட்டு நிகழ்வுகள் அப்துல் காதர் வித்தியாலய மைதானம் ஐயங்கேணி, ஏறாவூர் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுகள் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு. எம். பஸீர், சிறப்பு அதிதியாக ஏறாவூர் நகர உதவி பிரதேச செயலாளர் திரு ஏ. சி அஹமட் அப்கர், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி. ஜே. ஜாஹிதா ஜலால்தீன், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் திரு. ஜே. எப். மனோகிதராஜ் எஸ். ஏ. சி நஜீமுதீன், சமுர்த்தி கிளை அலுவலகர்கள், பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.