இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

கிளிநொச்சிக்கு மருதமடு மடுமாதா அன்னையினுடைய திருச்சொரூபம் வருகை

மன்னார் மருதமடு மடுமாதா அன்னையினுடைய திருச்சொரூபம் பல வருடங்களின் பின்பு கிளிநொச்சி அக்கராஜன் குளம் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு இன்று(24) காலை வருகை தந்தது.

திருச்சொரூப வாகனத்தை அக்கராஜன் குளம் பங்கு மக்கள் வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மக்களின் வழிபாட்டுக்காக மாலை மூன்று மணி வரை குறித்த ஆலயத்தில் வைக்கப்படவுள்ளது.

இதில் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் மடு அன்னையின் தரிசனத்தினைக் கண்டு மகிழ்ந்தனர்.

இன்று பிற்பகல் உருத்திரபுரம் பற்றிமா ஆலயத்திற்குச் செல்லவுள்ளது.

நாளை கிளிநொச்சி திரேசம்மா ஆலயத்திலும் பரந்தன் ஆலயத்திலும் மடு அன்னையின் திருச்சொருபம் கொண்டு செல்லப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: