போதைப் பொருள் கடத்தும் காவல்துறை..!
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது, கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில், பிரதேச செயலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
குறித்த சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னனியில் காவல்துறையினரே செயற்பட்டு வருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பகிரங்கமாக சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில், செ. கஜேந்திரன் தெரிவிக்கையில்,
மாவட்டத்தில் இடம்பெறுகின்ற அத்தனை சட்டவிரோத செயல்களின் பின்னணியிலும் காவல்துறையினரே இருக்கின்றார்கள்.
அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு, காவல்துறையினரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. என தெரிவித்தார்.
“காவல்துறையினரின் துணையுடனே மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.
எவ்வித பத்திரங்களும் வழங்கப்படாத நிலையில் கிராமப் புறங்களில் குறிப்பாக, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஊரியான், கோரக்கண்கட்டு, கல்லாறு, தட்டுவன்கொட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த செயற்பாடு காவல்துறை அதிகாரிகளுக்கு சொந்தமான கனரக வாகனங்களும் குறித்த மணல் அகழ்வுகளில் ஈடுபடுவதாகவும் பொது அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.”