இலங்கைவட மாகாணம்

வவுனியாவில் யானைத் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, மாமடுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாமடுப் பொலிசார் தெரிவித்தனர்.

 புத்தாண்டு தினமான நேற்று(14) மாலை வவுனியா, மாமடு – கள்ளிக்குளம் வீதியில் நபர் ஒருவர் பயணித்த போது வீதியில் நின்ற யானை குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

 பின்னர் அவ் வீதியால் சென்றோர் தாக்குதலுக்குள்ளான நபரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: