இலங்கைகிழக்கு மாகாணம்
எவர்கிறீன் விளையாட்டுக் கழகத்தின் கிராமிய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்
மட்டக்களப்பு இருதயபுரத்தில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டுப் போட்டி நேற்று(14) இடம்பெற்றது.
எவர்கிறீன் விளையாட்டுக் கழகத்தினரால் இவ் விளையாட்டுப் போட்டியானது ஆண், பெண் இருபாலருக்குமான ஓட்டம், கயிறு இழுத்தல், சாயமுட்டி உடைத்தல், சிறுவர், இளைஞர் என இருபாலருக்குமான ஓட்டப் போட்டி என பல்வேறு விளையாட்டு நிகழ்சிகள் நடைபெற்றன.
இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ் கிராமிய விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு அனைத்து மக்களும் பங்கு பெற்ற கூடிய ஒழுங்கமைப்பினை செய்து சிறப்பாக நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.