இலங்கைமலையகம்

மலையகத்தில் காணிப் பிரச்சினையினால் தம்பியை அண்ணன் அடித்துக் கொலை

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய அண்ணன் சில தினங்களுக்கு முன்னரே சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார். அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த நிலையில் நேற்று(12) மதியம் திடீரென ஊருக்கு வந்துள்ளார்.

அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் காணிப் பிரச்சினை இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் நேற்றும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இரவு அது வன்மையாக மாறியுள்ளது.

இதன்போது கத்தி மற்றும் போத்தலால் தம்பியின் தலைப்பகுதியில் தாக்கி அண்ணன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தலை பகுதியில் பலத்த காயம் காணப்படுகின்றது. கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: