இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

மத சகவாழ்விற்கான முன்னெடுப்பு

சமய முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் இன்று(18) தொடர்பாடலுக்கான பயிற்சி மையம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பெரியமடுவில் மாவட்ட இணைப்பாளர் க. யசோதரன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமானது.

தேசிய சமதானப் பேரவையின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு. மதனி உவைஸ் சமய முரண்பாடுகள் மற்றும் சமய மாற்றங்கள் உலகளாவிய ரீதியிலும் சரி இலங்கையிலும் சரி எவ்வாறு உள்ளது பற்றி விரிவாக இவ்வமர்வை நடாத்தினார்.

இக் கலந்துரையாடலில் பெரியமடு ஈச்சளவக்கை கிராம பொது அமைப்புகளின் தலைவர்கள், மத தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார் நிருபர்

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: