இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்
கிளிநொச்சியில் டெங்கு வருமுன் காப்போம் எனும் தொனியில் சிரமதானப்பணி
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு வருமுன் காப்போம் எனும் தொனிப்பொருளுக்கமைவாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினர் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இன்று(18) முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்துத் திணைக்களங்கள், வர்த்தகசங்கம், பொது மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் ஒன்றிணைத்து பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய சிரமதானப் பணிகள் கரடிப்போக்கு சந்தி மற்றும் வைத்தியசாலை வரை முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.