இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்
மட்டு வவுணதீவில் இடம்பெற்ற கலாசார மற்றும் இலக்கிய விழா
கலாசார பேரவையும் கலாசார அதிகார சபையும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசார மற்றும் இலக்கிய விழா – 2023 இன்று (28) பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இலக்கிய போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
முதலாம் இடத்தை பெற்ற அரங்க நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.