இலங்கைகிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக  வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

நாடு பூராகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு; பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக  ஆரம்ப விநியோகம்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில்  குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி போதிகள்  கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் நேற்று (21) வழங்கப்பட்டது.

600 மில்லியன் நிதி ஒதுக்கீடு மூலம் குறைந்த வருமானம் பெறும் 156000 குடும்பங்களுக்கு இரு தடவை அரிசிப் போதிகள் வழங்கப்படவுள்ளது.    

புது வருட காலப்பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அரிசி வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷிஸ்ரீகாந், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், வர்த்தக  வாணிப இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ரோஷ்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: