இலங்கைகிழக்கு மாகாணம்

களுதாவளையில் கலாசார விளையாட்டு விழா

களுதாவளையில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா கெனடி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் த. சர்வின் தலைமையில் களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

கெனடி விளையாட்டுக் கழகத்தின் 66வது ஆண்டினை நினைவு கூறும் முகமாக   கலாசார விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது தேங்காய் உடைத்தல், கம்பு சுற்றுதல், கையிறு இழுத்தல், கிடுகு பின்னுதல், முட்டி உடைத்தது மற்றும் தலையனைச் சமர் போன்ற பாரம்பரிய போட்டிகள் இடம் பெற்றன.

இக் கழகத்தினால் இப்பிரதேசத்தில் இருந்து தேசிய மற்றும் சர்வதேத் தரத்திலான வீரர்களை உருவாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத்துறையில் அதித திறமைகளை சர்வதேச மட்டத்தில் வெளிக்காட்டிய கழக வீரர்களுக்கு நினைவுச்சின்னம் அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெத்தினம், காணி சீர்திருத்த ஆணைக்குழுப் பணிப்பாளர் என். விமல்ராஜ், களுதாவளை பிரதேச சபை செயலாளர் எஸ். அறிவழகன் மற்றும் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் கோயில் பரிபாலசபைத் தலைவர் கே. பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்குப் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: