இலங்கை

போதைப்பொருளை சிறிய பகுதிகளாக விழுங்கிக் கடத்த முற்பட்ட இருவர் கைது

வெளிநாடொன்றிலிருந்து வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கினி நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 500 கிராம் கொக்கெய்னை சிறிய பகுதிகளாக விழுங்கி கடத்த முற்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான பெண்கள் காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: