இலங்கைஇன்றைய செய்திகள்முக்கிய செய்திகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விசேட பரிசோதனை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளைப்  பரிசோதிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 3,000 பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பண்டிகைக் காலத்துக்காக தயாரிக்கப்பட்ட பல உணவுகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

உணவு உற்பத்தி நிலையங்களில் உணவு தயாரிக்கும் நபர்கள் மருத்துவ பதிவுகளைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும்  உபுல் ரோஹன மேலும்  குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: