இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்
தோப்பூரில் பொது மக்களுக்கான ஆட்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்
திருகோணமலை தோப்பூர் உப-பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவினரால் இன்று(17) பொது மக்களுக்கான ஆட்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வெளிநாட்டுக்குச் செல்லவிருக்கும் பொது மக்களுக்கு இக்கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுக்கு செல்லும் போது பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டியதன் அவசியத்தின் தன்மை பற்றியும் ஆட்கடத்தலுக்கு உட்படாமல் எவ்வாறு பாதுகாப்பாக புலம்பெயர்வது என்பது பற்றியும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதிலும் இதன்போது கூறப்பட்டது.
இக்கூட்டத்தினை பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் நடாத்தினார்.