இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்

தம்பலகாமத்தில் தமிழ் சிங்களப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விருந்துபசாரம்

தமிழ் சிங்களப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மூவினங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் இணைந்து விசேட விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த விருந்தோம்பல் நிகழ்வானது இன்று(17) பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் சிங்கள இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

மூவின சமூகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இதில் இணைந்து உணவுப் பறிமாற்றத்தை மேற்கொண்டனர்.

சகவாழ்வு நல்லிணக்க செயற்பாடு இதன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: