இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்
தொழிலுக்காக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கான பாதுகாப்பான புலம்பெயர்வு பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் தொழிலுக்காக வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கான பாதுகாப்பான புலம்பெயர்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று(24) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பொ. தனேஸ்வரன் வழிகாட்டலின் கீழ் நடாத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தெளிவூட்டலில் பிரதேச செயலகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.