தமிழ்ப் பொது வேட்பாளரே காலத்தின் தேவை- பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்
தமிழர்களுக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும், தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக போராட்டப் பாதையில் தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் புதுவருட பிறப்பு கைவிசேஷம் வழங்கி வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1978 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குமார் பொன்னம்பலம் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக பல ஜனாதிபதித்தேர்தலில் பல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.
ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை. ஆதரவு அளித்த பல பேர் தோல்வியடைந்தனர். ஆனால் வெற்றி பெற்ற மைத்திரி உள்ளிட்டோர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்றுத்தரவில்லை.
இதனால் தான் நீண்ட நெடும் அனுபவத்தின் அடிப்பையில் பலரும் பல கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். தமிழர்களுக்கு இறையாண்மை வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக போராட்டப் பாதையில் தங்களை வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
தங்களுக்கான அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஒரு கருவியாக இந்த ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கச் செலவிலேயோ பொது வேட்பாளரை நிறுத்தி அந்தப் பொதுவேட்பாளர் ஊடாக எந்களுடைய செய்தியைச் சொல்லுவது என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது.