இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

ஜோசப்வாஸ் நகருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் விஜயம்

கிராமமக்களது கோரிக்கைக்கமைய இன்று(25)ஜோசப்வாஸ் நகருக்கான தமது விஜயத்தை எமது மன்னார் மாவட்ட அரச அதிபர் உயர் திரு. கனகசபாபதி கனகேஸ்வரன் மேற்கொண்டார்.

வருகைதந்த அரச அதிபரை பங்குத்தந்தை அருட்பணி இராஜநாயகம் அடிகளார் கைலாகை கொடுத்து வரவேற்றதை தொடர்ந்து புனித வின்சன்றி போல் முன்பள்ளி சிறார்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

மேற்படி நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி செயலாளர் திரு. டிலுசன் பயஸ் , மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இயக்குனர் அருட்பணி விக்டர் சோசை அடிகளாரும், பள்ளிமுனை பங்குத்தந்தை அருட்பணி டெனிக்கலிஸ்ரஸ் அடிகளாரும், கற்கடந்தகுளம் பங்குத்தை அருட்பணி டெஸ்மன் அஞ்சலோ அடிகளாரும், மன்னார் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திவாகரி, கிராமத்தில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகஸ்தர்களான கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகஸ்தர், அபிவிருத்தி அலுவலர் மற்றும் ஊடகவியலாளர் றோஜினி ஆகியோர் வருகைதந்தனர்.

மேலும் வருகை தந்திருந்த அரச அதிபரினால் கிராமத்தின் ஆயர் இராயப்பு யோசப்பு விளையாட்டு மைதானம்,ஆலய வளாகம், கிராமத்தின் வீதிகள், உள்ளக வீதிகள் மற்றும் முதியோர் சங்கம் போன்றவை பார்வையிடப்பட்டன.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: