இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்
கிண்ணியாவில் எழுத்தாளர் ஜெனீரா கைருல் அமானை கௌரவிக்கும் நிகழ்வு
மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கலைஞர்களை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்து கௌரவிக்கும் செயல் திட்டத்திற்கு அமைவாக இன்று(25) எழுத்தாளர் ஜெனீரா கைருல் அமான் அவர்களின் வீடு தேடிச் சென்று நலம் விசாரித்ததுடன் வாழ்த்துச் சான்றிதலும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனியினால் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு பிரதமர் முகாமைத்துவ உத்தியோகத்தர், கிண்ணியா பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.