இந்தியச்செய்திகள்இலங்கைஇன்றைய செய்திகள்முக்கிய செய்திகள்வட மாகாணம்

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நடவடிக்கையின் போது மீனவர்கள் பயன்படுத்திய படகொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்களை விசாரணைகளின் பின்னர்  ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: