இலங்கைவட மாகாணம்
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தையே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இறந்தவரின் சடலம் உடற்கூற்றுப்பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்