இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்
கல்முனை வடக்கில் இன்று கறுப்பு சித்திரை அனுஷ்டிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வலியுறுத்தி இன்று(14) கறுப்பு சித்திரை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
கல்முனை வடக்குப் பிரதேசத்தைத் தனியான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தித் தருமாறு வலியுறுத்தியும், கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் நேற்று (13) 20 ஆவது நாளாக மக்கள் போராட்டம் இடம்பெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச சிவில் அமைப்புக்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சித்திரைப் புதுவருட தினத்தை கல்முனை வடக்கு பிரதேச மக்கள் கறுப்பு சித்திரையாக அனுஷ்ட்டித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.