இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்

ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் செங்கலடி பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஏ. எஸ் .முகம்மது இர்ஷாத் தலைமையில் ஏறாவூர் ஜிப்ரியா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செய்யிது அலிசாகிர் மௌலானா கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம். எஸ். நழீம் அவர்களும் விசேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தின் முன்பள்ளிக்கான முன்னாள் உதவிக்கல்வி பணிப்பாளர் எம். எச் .எம் .நசீர் மற்றும் ஏறாவூர் கோட்ட பாலர் பாடசாலையின் இணைப்பாளர் சக்கினா பௌசூல் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன் அதிதிகளால் மாணவ மாணவிகளுக்குபரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: