இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

ஏனைய மதத்தவரை மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சி நிலைப்பாடு- சிவ. சந்திரகாந்தன்

தமது நாட்டில் ஏனைய மதத்தவரையும் மதித்து நடக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் ஏனைய நாடுகளைப் போல் இலங்கையும் அபிவிருத்தி இலக்கை அடைய முடியும் என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று(21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் போது ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பை தற்போது அரசியலாக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் ஆழமான அறிவைத் தேடிப் பார்க்க வேண்டும் இதனை அரசியல் சாயம் பூச முயல்கிறார்கள். எல்லா மதங்களிலும் கடும் போக்கானவர்களாக இருக்கிறார்கள்.

உலகளாவிய ரீதியில் தடை செய்யப்பட்ட பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு கூராகத்தான் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதமும் இருந்தது. பல நாடுகளிலும் பயிற்சி எடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த சஹ்ரானும் அவரது குழுவினரும் இருந்தன.ர் இதனை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா ஆஸ்திரேலியா பொலிஸார் இதனை சரியாகக் கணித்து ஆராய்ந்து அவர்கள் அறிக்கையை சமர்ப்பித்து விட்டு வெளியேறி விட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சரியாக நடந்ததைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் நமக்கு உள்ளது. இதற்காக தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். மதத்தின் பெயரால் நூறாண்டுகளுக்கு மேல் இயங்கும் இந்த வாகா பாதத்தை முறியடிப்பது இலகுவான விடயம் அல்ல. இதனை முறியடிப்பதற்கு அதி தொழில்நுட்பம் கூடிய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: