இலங்கைகொழும்புமுக்கிய செய்திகள்

அரச வங்கிகள் இன்று திறப்பு!

அரச வங்கிகளை இன்று (30) திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று நிக்கினி பூரணை தினமாக இருந்தாலும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் அரச வங்கிகள் திறக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அதன்படி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை திறந்திருக்கும்.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 8 லட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறவுள்ளனர்.

இது குறித்த பணத்தை வங்கிகளுக்கு வழங்க திறைசேரி அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
 

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: