இலங்கைகிழக்கு மாகாணம்

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் ஆமை இறைச்சி மற்றும் 17 ஆமைகளை காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை,  இரண்டு சந்தேக நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலையைச்  சேர்ந்த இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஆமைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளத்துடன், சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: