இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்
வீதியோரத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்தினைத் தரும் மரங்கள் வெட்டப்படுவதாக மக்கள் ஆதங்கம்
மன்னார் மடு மின்சார சபையின் ஈச்சளவக்கை, பெரியமடு மற்றும் சன்னார் ஆகிய பல கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தினை தரக்கூடிய தென்னை, பலா மற்றும் மாமரம் வீதி அருகில் நிற்கும் பயன் தரும் மரங்களை மின்சார வயர்களில் உரசுவதாக வெட்டுகின்றார்கள்.
மின் ஒழுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இது போன்று நாம் சுட்டிக்காட்ட கூடியவாறு வீதியோரத்தில் மரங்களில் மின்சார வயர்கள் அவ்வாறு உரசப்படுவது ஆபத்து இல்லையா?அந்தமரங்களின் ஊடே மின் ஒழுக்கு ஏற்படாதா? அது இவர்கள் கண்களுக்கு தெரியாதா?
எமது காணிகளில் நிற்கும் பயன்தரு மரங்களில் மட்டும் மின் ஒழுக்கு பாதிப்பு ஏற்படுமா? என அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.