இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

வவுனியாவில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நிலைபேறான வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைதிட்டத்தின் ஒரு கட்டமாக நாடு முழுவதும் சுப நேரத்தில் ஒரு மரக்கன்று நடுதல் எனும் வேலைத்திட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் இன்று(18) மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படிருந்தது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திரு பி. ஏ. சரத்சந்திர கலந்து கொண்டதோடு சுப வேளையில் மரக்கன்றினையும் நட்டு வைத்தார்.

இவ் வேலைதிட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் வவுனியா மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: