இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்த
கிராம உத்தியோகத்தர்கள்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு இன்று(20) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிட பணிப்பாளர் ஐ.முஜிப், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.