இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்

முல்லைத்தீவு மாவட்ட செயலக கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

பிறந்துள்ள குரோதி தமிழ் சிங்களப் புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று(17) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு பிறந்திருக்கின்ற புதுவருடம் சிறப்பானதும் ஆரோக்கியமானதுமான வருடமாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். குணபாலன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் சி. ஜெயகாந் , பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரியோரிடமிருந்து கைவிசேடம் பெறுதல் என்பது அந்த ஆண்டு முழுவதும் பண வரவும் நன்மைகளும் கிடக்கப்பெறும் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: