இலங்கைஉலகம்வட மாகாணம்
முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கரவண்டி ஓட்டப் போட்டி
மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வன்னிப் படைத்தலைமையகம், 59வது படையணி, 64 வது படையணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய மாபெரும் மரதனோட்டம் மற்றும் துவிச்சக்கரவண்டி ஓட்டம் இன்றைய தினம் (07) காலை 6.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம் மாமூலை டைமன் விளையாட்டு மைதான முன்றலில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
இந்த விளையாட்டு போட்டியினை 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய ஆரம்பித்து வைத்திருந்தார்.