இலங்கைஇன்றைய செய்திகள்கிழக்கு மாகாணம்
மட்டு புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கலாசார விளையாட்டு விழா
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் தமிழ் சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா இன்று(22) நடைபெற்றது.
இதனை இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் பல்சமய சிறுவர் விளையாட்டு கழகம் யூனியன் கொலனி வாழைச்சேனையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது சர்வமத குருமார்களின் இறை ஆசியுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டதன.
சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், தேசிக்காய் ஓட்டம், யானைக்கு கண் வைத்தல் மற்றும் முட்டி உடைத்தல் போன்ற பல்வேறு சிறுவர் கலாசசார விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதன.
இந்நிகழ்வில் அதிதிகளாக பாடசாலை அதிபர் இ. விஜயகரன் மற்றும் சர்வமத குருமார்களும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.