இலங்கைகிழக்கு மாகாணம்

பொத்துவில் கடலில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

பொத்துவில் பகுதிக் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனாவான்.

இவர் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார், கடற்படையினர், உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: