இலங்கைகிழக்கு மாகாணம்
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணரல்
பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் ஊடாக அக்கரைப்பற்றில் நடைபெற்ற, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்மந்தமான ஊடக சந்திப்பு ஒன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பாதிப்பற்ற பெண்கள் அரங்கத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று(18) இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஊடகத்துறை மற்றும் அரசியலில் உள்ள பெண்களுக்கு சமுகத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சிறுவயது திருமணங்கள் என்பன பற்றிய கருத்துக்களும் இவ் ஊடக சந்திப்பில் முன்வைக்கப்பட்டது.