இலங்கைகிழக்கு மாகாணம்
பாக்குநீரினையை நீந்தி சாதனை படைத்த மதுஷிகன் கின்னஸ் சாதனை படைக்கத் தயார்
கடந்த வருடம் மே 04 திகதி பாக்குநீரினையை நீந்திக்கடந்து சாதனை படைத்த புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன் தற்போது கின்னஸ் சாதனை படைப்பதற்கு தயாராகி வருகிறார்.
எதிர்வரும் மே மாதம் 25ம் திகதி கொழும்பு காலிமுகக் கடலில் 50 கிலோ எடையை இழுத்துக் கொண்டு 10 கி.மீ கடல் தூரத்தை நீந்தி சென்றே இந்த சாதனையை படைக்கவுள்ளார்.
இதன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் வெளியிட்டுள்ளத்துடன், இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஜனாதிபதி செயலகம் ஊடாக செய்து கொடுப்பதாக உறுதி மொழியும் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.