பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு
ஏறாவூர் வடக்கு மேற்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வும் சாதனை மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் கடந்த(16) இடம் பெற்றது.
பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் கே. மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனை மாணவர்களை கௌரவித்தார்.
இந்நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய நா. மதிவண்ணன், விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கே. வீ. தங்கவேல், கிழக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி பிரிவின் பொறுப்பாளர் க. வேல்வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் இப்பிரதேசத்தில் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.