இலங்கைஉலகம்வட மாகாணம்
நாம் சுற்றாடலைப் பாதுகாப்போம் எனும் தொனியில் பொலிஸாரால் பதாதைகள் காட்சிப்படுத்தல் வேலைத்திட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி பொலிஸார் பதாதைகளை காட்சிப்படுத்திப்படுத்தினர்.
மாவட்டத்தில் அதிகளவு மக்கள் நடமாடி வருகின்ற பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதினால் அக்கழிவுகளினால் போக்குவரத்துக்கும் பயணிகளுக்கும் அசௌகரியங்கள் விளைவிக்கின்ற போதும் பல தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
இவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதால் இவ்வாறான வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.