இலங்கைபிரபலமானவை

தேசிய அரசாங்கத்துக்கு அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும்: ராஜித!!

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில், அதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம்
மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை 2007 ஆம் ஆண்டு நான் முன்வைத்தபோது அதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. இதையடுத்து நாம் அரசாங்கத்துடன் இணைந்தோம். நாட்டை மீட்டோம்.

அன்று போலவே இன்றும் நெருக்கடி உள்ளது. எனவே, நாட்டை மீட்கக் கட்சி பேதம் பாராது அனைவரும் ஒன்றுபட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: